சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் சித்திரக் கவிகளின் தோற்றுவாய். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரை பின்பற்றி அருணகிரிநாதரும் அமைத்துள்ளார். இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும் சித்திரக்கவிகள் படைத்துள்ளார்.